Monday, September 27, 2010

இயற்கை




நிற்காமல் ஓடும் நிலை கொள்ளா மனிதர்களே – சற்றே


நிமிர்ந்து பார்த்து என்றாவது

நடந்து செல்லும் மேகம் பார்த்ததுண்டா?



அதிகாலைச் சூரியனை

அரை நிமிடமேனும் காணும்

ஆவல் கொண்டதுண்டா?



பார்க்க பார்க்கப்

புதிதாய் இருக்கும்

'நிலாமுகம்' – நின்று ரசித்ததுண்டா?



அதற்குத் தோழிகள் போல்

அருகிலே நிற்கும் நட்சத்திரங்கள்

கண்சிமிட்டும் அதிசயம்

கண்டு வியந்ததுண்டா?



மறையப் போகும் அந்த

அரைமணி நேரத்திலும் தன்னை

அழகுப் பதுமையாய் அலங்கரித்துக் கொள்ளும்

அந்திச் சூரியன் பார்த்து

ஆனந்தப்பட்டதுண்டா?

இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும்


இறைவன், அவர்களின்

மரணத் தேதியைச் சற்றே

மாற்றி அமைக்கிறான்.

Saturday, September 25, 2010

உலகத்தில் உள்ள இந்து கோயில்கள் சில

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன இவற்றில் சமய குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன. மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகத்தில் உள்ள இந்து கோயில்கள்   சில
 LordVenkateshwara Temple, Birmingham, United Kingdom

Malibu Hindu Temple, Malibu, California, US

Lord Vishnu Temple, Angkor, Cambodia

Prambanan Shiva Temple, Central Java, Indonesia

Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora, Illinois, United States

BAPS Shri Swaminarayan Mandir - Toronto, Canada


 BAPS Shri Swaminarayan Mandir, London (Neasden Temple), United States

Sri Murugan Temple “Batu Caves”, Penang, Malaysia


Sri Venkateswara Temple, Bridgewater, NJ, US


Mother Temple of Besakih, Bali, Indonesia


Murugan Temple, Sydney, Australia


Sri Venkateswara Swami Temple, Helensburgh, Sydney, Australia


Velmurugan Gnana Muneeswarar Temple, Rivervale Crescent Sengkang, Singapore


Sri Meenakshi Devasthanam - Pearland, Texas, US


Ekta Mandir, Irving, Texas, US




Sri Venkateswara Swami Temple, Pittsburgh, US


Shiva Vishnu Temple of South Florida Inc, FL, US


Shiva - Vishnu Temple of Melbourne, Melbourne, Australia

Sri Murugan Temple, London, UK


Shiva-Vishnu Temple, Livermore, California, US

Venkateswara Swami temple, Riverdale near Atlanta, Georgia, US


உலகத்தில் உள்ள 10 உயர்ந்த நகரங்களின் புகைப்படம்



பெய்ஜிங்
 


கோபென்ஹகேன்
 

கனிவா



ஹாங்காங்
 

மோஸ் கவ்



நியூ யார்க்
 


ஒசாகா
 


 


ஜுரிச்
 


சிங்கப்பூர்
 

Friday, September 10, 2010

பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!

அதிசியம்   ஆனால் உண்மை  
தனது நாய் மூன்று பூனைக்குட்டிகளை பிரசவித்திருப்பதாக அதன் உரிமையாளரான ஜி.கே. சோமதாச தெரிவித்துள்ளார். இவ்வாறு பிறந்த மூன்று பூனை குட்டிகளில் ஒன்று பின்னர் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அதிசயப் பூனைக்குட்டிகளைப் பார்ப்பதற்காக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எஞ்சிய குட்டிகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உரிமையாளர் குறிப்பிட்டார்.

எனினும் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள், இது சாத்தியமற்ற ஒன்று என்றே கூறியுள்ளனர்.

என்னால் முடியும்


தர்மபுரி: குட்டி சைக்கிளில் பால் கேனை ஏற்றி, ஓட்டிச் செல்லும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்ப மாட்டீர்கள்! சும்மா இல்லை... ஒரு கி.மீ., தூரம் சைக்கிளை ஓட்டி, பால் சப்ளை செய்கிறது ஒரு நாய்!

தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி கீழ் தும்பலஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (42). தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை, பத்து மாதத்துக்கு முன் எடுத்து, வளர்க்கத் துவங்கினார். அதற்கு மணி என்றும் பெயர் வைத்தார். தங்கவேல் கால்நடைகள் வளர்த்து வருகிறார். தினம் காலை மற்றும் மாலையில் பாலை கறந்து, தும்பலஅள்ளியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு எடுத்து சென்று கொடுத்து வருவார். இவர் காலையும், மாலையும் பால் சொசைட்டிக்கு கிளம்பும் போது, மணியும் தொடர்ந்து கூடவே சென்று வரும். ஒரு நாள், மணி மூலம் பால் கொடுக்க முடிவு செய்தார். ஒரு தூக்கில் பால் ஊற்றி, நாயிடம் கொடுத்தார். அதுவும், வாயில் கவ்வியபடி பாலை எடுத்துச் சென்று, சரியான நபரிடம் கொடுத்துத் திரும்பியது.

இதையடுத்து, 1,500 ரூபாய் செலவில், பால் கேன்களை ஏற்றிச் செல்லும் வகையில் சிறிய சைக்கிளை உருவாக்கிய தங்கவேல், மாடுகளை பூட்டுவது போல் நாயைப் பூட்டி, அதில் 35 லிட்டர் பால் கேனையும், கூட்டுறவு சங்க பதிவேடு புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். தனியாக ரோட்டில் செல்லும் நாய், பால் சொசைட்டியில் நின்று பால் கேனை ஊழியர்கள் பெற்று பதிவேட்டில் பதிவு செய்த பின், மீண்டும் காலி கேனுடன் வீட்டுக்குத் திரும்பி வருகிறது. சில நேரங்களில் தங்கவேலின் மகன் மற்றும் மகளையும் சைக்கிளில் சுமந்தபடி பயணம் செய்யும் மணியை, அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஒரு மாதமாக பால் கேனுடன் பயணம் செய்யும் நாய்க்கு, வீட்டுக்கு திரும்பியதும், வீட்டில் உள்ளவர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழிப்பதையும் வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

இது குறித்து தங்கவேல் கூறியதாவது: தினம் நான் செல்லும் இடங்களுக்கு வந்த நாயை இப்படி பழக்கி விட்டேன். எனக்கு பெரும் உதவியாக மாறி விட்டது. வீட்டில் நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடும் மணி, நன்றிக்கு உதாரணம் என்பதை செயலில் செய்து காட்டுவது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இவ்வாறு தங்கவேல் கூறினார்.