Monday, September 27, 2010
இயற்கை
நிற்காமல் ஓடும் நிலை கொள்ளா மனிதர்களே – சற்றே
நிமிர்ந்து பார்த்து என்றாவது
நடந்து செல்லும் மேகம் பார்த்ததுண்டா?
அதிகாலைச் சூரியனை
அரை நிமிடமேனும் காணும்
ஆவல் கொண்டதுண்டா?
பார்க்க பார்க்கப்
புதிதாய் இருக்கும்
'நிலாமுகம்' – நின்று ரசித்ததுண்டா?
அதற்குத் தோழிகள் போல்
அருகிலே நிற்கும் நட்சத்திரங்கள்
கண்சிமிட்டும் அதிசயம்
கண்டு வியந்ததுண்டா?
மறையப் போகும் அந்த
அரைமணி நேரத்திலும் தன்னை
அழகுப் பதுமையாய் அலங்கரித்துக் கொள்ளும்
அந்திச் சூரியன் பார்த்து
ஆனந்தப்பட்டதுண்டா?
இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும்
இறைவன், அவர்களின்
மரணத் தேதியைச் சற்றே
மாற்றி அமைக்கிறான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment